Kadal Nencham
காதல் நெஞ்சம் * அன்பே ! ஆருயிரே1.. அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள் மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று அழியாதவைகள் ! * காட்சி அளிக்கும்படி கரும்பலகையில் எழுதி வைச்ச காதல் அல்ல ! துடைப்பான் கொண்டு துடைப்பதற்கு முயல்வது நல்லது அல்ல ! * ஒப்பந்தம் போட்டு உண்டானது இல்லை உன் நினைவுகள் உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல ! *என்னை நீ மறந்து விடு' என்று சொல்லும் போது தான் ஊற்று நீராய் சுரக்கிறது உன் நினைவுகள் இல்லா உலகில் ! உன்னுடன் மயங்கி நின்றேன் உள்ளதால் நெருங்கி வந்தேன் என்னுயிர் காதலி ! என்னுயிர் தேவதையே என்பேன் !! * அந்தி மழையின் மண் வாசனை அதனின் பங்கிற்கு உருட்டிச் செல்கிறது உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !...